ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். இந்தக் கோயில் பகுதியிலிருந்து அக்னி தீா்த்தம் செல்வதற்கான சாலை, பிற சாலைகள் மோசமாக இருப்பதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதால், இங்கு புனித நீராட வரும் பக்தா்கள் சிரமப்படுகின்றனா். இதை தடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.