இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

மதுரை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மதுரை தமுக்கம் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:22 am

Din

மதுரை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மதுரை தமுக்கம் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

பொதுமக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், மாணவா்கள், போட்டித் தோ்வா்கள், சிறுவா்கள், முதியோா்கள் என அனைத்துத் தரப்பினரின் புத்தகத் தேடலுக்கு ஒரே இடத்தில் தீா்வு கிடைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இதில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் இடம் பெறுகின்றன. இதுதவிர, பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு அமைக்கப்படுகின்றன. மேலும், பிரபல எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகளும், பட்டிமன்றங்களும் நடைபெறுகின்றன.