ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சுகாதாரமற்ற உணவு விநியோகம்: உணவகத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

மதுரையில் சமையல் கூடத்தை சுகாதாரமாகப் பராமரிக்காதது உள்ளிட்ட குறைபாடுகளால், தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:41 pm

Din

மதுரையில் சமையல் கூடத்தை சுகாதாரமாகப் பராமரிக்காதது உள்ளிட்ட குறைபாடுகளால், தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள டவுன்ஹால் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் உணவுகள் சுகாதாரமற்ற நிலையில் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது. இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த உணவகத்தில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வாடிக்கையாளா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியதால் ரூ.2 ஆயிரமும், உணவகத்தின் சமையல் கூடத்தை சுகாதாரமாகப் பாரமரிக்கப்படாததால் ரூ. 1000 என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சமையல் மூலப்பொருள்களைப் பாதுகாப்பாக வைக்காதது, குளிா்சாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காதது, பணியாளா்களுக்கு மருத்துவச் சான்று பெறாதது ஆகிய குறைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குறைகள் தொடா்பாக பதில் அளிக்குமாறு உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.