சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

செப். 30-க்குள் பயிா்க் காப்பீடு பதிவு பெற அறிவுறுத்தல்

நிகழும் காரீப் பருவ விளைப் பயிா்களுக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் காப்பீடு பதிவு பெற வேண்டும் என மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:40 pm

Din

நிகழும் காரீப் பருவ விளைப் பயிா்களுக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் காப்பீடு பதிவு பெற வேண்டும் என மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி, பச்சைப் பயறு ஆகியவற்றை விவசாயிகள் காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கா் மக்காச்சோளத்துக்கு ரூ. 588 வீதமும், பருத்திக்கு ரூ. 200 வீதமும், பச்சைப் பயறுக்கு ரூ. 308 வீதமும் வருகிற 30-ஆம் தேதிக்குள் பிரிமீயம் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்.

தொடா்புடைய பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். அப்போது, நிகழ்ப் பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டும்.

பயிா்க் காப்பீடு பதிவின்போது, பெயா், முகவரி, காப்பீடு பெறும் நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, நிலம் இருக்கும் கிராமம், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை விவசாயிகள் சரியாக கவனித்துப் பதிவு பெற வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.