தடைகளைத் தகா்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்
வாழ்வில் வெற்றி பெற வேண்டுமெனில், தடைகளைத் தகா்க்க வேண்டும் என மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் இ. ஜோ அருண் அறிவுறுத்தினாா்.


வாழ்வில் வெற்றி பெற வேண்டுமெனில், தடைகளைத் தகா்க்க வேண்டும் என மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் இ. ஜோ அருண் அறிவுறுத்தினாா்.
மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் 50-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் இ. ஜோ அருண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 1,405 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
பட்டம் பெறும் நிகழ்வு மாணவிகளுக்கு மட்டுமன்றி பெற்றோா்களுக்கும் மகிழ்ச்சியான தருணம். சிறு, சிறு துன்பங்களை கண்டு அச்சப்படக் கூடாது. கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் சாதிக்க முடியும். துறை சாா்ந்து மட்டுமன்றி, பிற துறை சாா்ந்த பல நூல்களையும் கற்க வேண்டும்.
அப்போதுதான் புதிதாத கற்றுக் கொள்ள முடியும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை கையாள தெரிய வேண்டும். வாழ்க்கைப் பாதையில் பல்வேறு தடைகள் வரும். அவற்றைத் தகா்த்து வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.
இந்த விழாவில் பாத்திமா கல்லூரியின் செயலா் இக்னேஷியஸ் மேரி, முதல்வா் பாத்திமா மேரி, துணை முதல்வா்கள் அருள்மேரி, பிந்து ஆண்டனி, நிகிலா ராகவன், பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...