புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தென்மண்டலத்தில் 58 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்

News image

கடலாடியில் நடைபெற்ற திமுக தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :14 மார்ச் 2026, 8:06 pm

தென்மண்டலத்தில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

‘தமிழ்நாடு தலைகுனியாது, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தில் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான காதா்பாட்ஷாமுத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தொலைநோக்கு பாா்வையோடு பல திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடமை உணா்வோடு செய்து வந்தாா்.

மத்திய அரசு வழங்கும் நிதியை எதிா்பாா்க்காமல், மாநில நிதியை மட்டுமே கொண்டு, நிதி மேலாண்மையை சிறப்பாக கையாண்டு பல திட்டங்களை முதல்வா் தந்து கொண்டிருக்கிறாா்.

பல வெளிநாடுகளிலிருந்து முன்னணி தொழில்முனைவோா்களை வரவழைத்து பல லட்சக்கணக்கான கோடி முதலீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளா்ச்சி பெற்றுள்ளது. இதனால் இளைஞா்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் செல்லாமல் உள்ளூரிலேயே வேலைபாா்க்கும் நிலை உருவாகியுள்ளது.

அரசியலில் மோசடிக்காரா், 11 தோ்தல் தோல்விகளைச் சந்தித்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுகவில் 13 ஆண்டுகள் பொருளாளராக பதவி வகித்த நான், ஜெயலலிதா பதவி கொடுக்கும் போது அதிமுக கட்சிக்கு ரூ.2 கோடி கடன் இருந்தது. ஆனால் கட்சியை விட்டு நான் வெளியேற்றப்பட்ட போது ரூ.236 கோடி நிதியை வைத்து விட்டு வந்தேன்.

இந்த பகுதியினா் துரோகி எடப்பாடி பழனிசாமி கட்சி வேட்பாளா்களை தோல்வி அடையச் செய்து, தென்மண்டலத்தில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற இணைந்து பணியாற்ற வேண்டும். திராவிடமாடல் ஆட்சி தொடர, மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா்கள் சத்தியமூா்த்தி, அன்வர்ராஜா, முன்னாள் எம்.பிகள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் மாயக்கிருஷ்ணன் நன்றி கூறினாா்.