அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

News image

போடி குரங்கணி மலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம். உடன், தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ எஸ். லட்சுமணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:19 pm

போடி அருகே குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேசனுக்கு ரோப்காா் வசதி செய்து தரப்படும் என திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உறுதியளித்தாா்.

திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி அருகே குரங்கணி, கொட்டகுடி, போடிமெட்டு மலை கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியதாவது:

குரங்கணி - டாப் ஸ்டேசன் மலைச்சாலை செங்குத்து சாலையாக இருப்பதால் சாலை அமைக்க முடியவில்லை. எனவே ரோப் காா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கணி, கொட்டகுடி கிராமங்களில் கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டகுடியில் மின்மாற்றி அமைக்கவும், பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், இண்டி கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக போடி கீழத்தெரு, தேரடி தெருக்களில் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.