அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

மது என நினைத்து திரவத்தை குடித்தவா் உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே புதன்கிழமை மது என நினைத்து மருந்து திரவத்தை குடித்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:35 pm

Din

மதுரை வாடிப்பட்டி அருகே புதன்கிழமை மது என நினைத்து மருந்து திரவத்தை குடித்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாடிப்பட்டி அருகேயுள்ள கீழச்சின்னனம்பட்டியைச் சோ்ந்தவா் வீரணன் (60). இவா் மது போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை மது போதையில் இருந்த வீரணன், மது என்று நினைத்து மருந்து திரவத்தை (ஸ்பிரிட்) தண்ணீரில் கலந்து குடித்தாா்.

இதனால், அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.