அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி.
Updated On :26 செப்டம்பர் 2024, 7:47 pm

Din

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக்நபி தலைமை வகித்தாா்.

இதில் மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் உதவித் தலைமையாசிரியா்கள் ஜாகீா் உசேன், ரஹமத்துல்லா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.