தாய், இரு மகள்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகா் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
Published on

விருதுநகா்: விருதுநகா் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

விருதுநகா் பட்டம்புதூா் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்துக்குடி இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று சிதறிக் கிடந்த உடல் பாகங்களைக் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா்கள் பட்டம்புதூா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தா்மரின் மனைவி ராஜவள்ளி (60), அவரது மகள்கள் மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (25) என்பது தெரியவந்தது.

அண்மைக்காலமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த ராஜவள்ளி தனது குடும்ப வறுமையைக் கண்டு வருந்தி வந்ததாகவும், வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான தனது இரு மகள்களுக்கும் தன்னால் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில், தனது இரு மகள்களுடன் ராஜவள்ளி செவ்வாய்க்கிழமை மாலை திருவனந்தபுரம்- திருச்சி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து துாத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com