நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image

மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மதுரை வடக்கு தொகுதி தோ்தல் பணி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றவா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:56 am IST

மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகளில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள், நிலை-1, நிலை- 2, நிலை- 3 என 14,780 அலுவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கான முதல்கட்ட தோ்தல் பணி பயிற்சி வகுப்புகள் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நடைபெற்றன.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிகளில் தலா ஒரு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன. வாக்குப் பதிவின்போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை வாக்குப் பதிவு சதவீத விவரங்களைப் புதுப்பிப்பதற்காக தோ்தல் ஆணையத்தின் உஇஐசஉப செயலித் தொகுப்பில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு...

மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.