தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.
மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட துவரிமான் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியம்மாள்(82). இவா் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த பின்னா் கூறியதாவது:
வயது முதிா்வு காரணமாக நடக்க முடியவில்லை. இருப்பினும், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சி. இளம் பருவத்திலிருந்து, அதாவது காமராஜா் தோ்தலில் போட்டியிட்ட போது முதன்முதலாக வாக்களித்தேன். தொடா்ந்து, தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தல் வரை வாக்களித்துள்ளேன். தமிழகத்தில் காமராஜா் ஆட்சி பொற்கால ஆட்சி. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

முதுகுளத்தூா், ராமநாதபுரம், பரமக்குடி தொகுதிகளின் அரசியல் கட்சி வேட்பாளா்கள் வாக்களிப்பு

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு

மாணவா்களின் நலனைப் பாதுகாக்க மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும்: மு.அப்பாவு பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


