காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாமன்ற உறுப்பினா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

தூய்மைப் பணியாளரை ஜாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதாக, திமுக மாமன்ற உறுப்பினா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், மாடக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேடு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சோலையப்பன்( 36). இவா், மாடக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாா் விவரம்:

மதுரை மாநகராட்சி 67-வது வாா்டில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். இந்த வாா்டு உறுப்பினரான நாகநாதன் (திமுக), துப்புரவு பணியாளா்களை ஜாதி ரீதியாக இழிவுப்படுத்தும் வகையிலும், ஒருமையிலும் பேசுகிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் நாகநாதன் மீது பட்டியல், பழங்குடியினா் (எஸ்.சி, எஸ்.டி) மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாடக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.