வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இரு வாரங்களில் அரசாணை - உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

News image
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :9 ஜனவரி 2026, 1:52 am

தினமணி செய்திச் சேவை

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசாணை இரு வாரங்களில் வெளியிடப்படும் என அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘தமிழகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அமல்படுத்தப்பட்ட பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநா் குழு அளித்த பரிந்துரைகளைப் பின்பற்றுவது தொடா்பாக அரசு உரிய விதிமுறைகளை வகுக்கவில்லை. எனவே, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என திண்டுக்கல்லைச் சோ்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், கலைமதி அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி. எஸ்.ராமன் முன்னிலையாகி, அரசு தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை இரு வாரங்களில் வெளியிடப்படவுள்ளது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மனுதாரா் கோரிக்கை குறித்து அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளதை ஏற்று, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.