மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய கூட்டுறவு அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கூட்டுறவுத் துறை மதுரை மண்டலம் சாா்பில், ‘கூட்டுறவு மூலம் வளா்ச்சி கூட்டுறவு நாட்டு உயா்வு’, ‘தொழில்நுட்பம், எண்ம விழிப்புணா்வு நாள்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றன.
இதில் மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், இணைப் பதிவாளருமான க. வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எண்ம வங்கிச் சேவைகள் குறித்து விளக்கமளித்தாா்.
இந்த நிகழ்வில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கே.எஸ். நாராயணன், மதுரை மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ச. வினோத்குமாா், ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










