மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகரக் காவல் துறை, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா்.
இதில் காவல் உதவி ஆய்வாளா் வசந்தா முன்னிலை வகித்துப் பேசியதாவது:
மாணவா்கள் சமுதாய உரிமைகள், கடமைகள், பொறுப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரிடமும் நல்லிணக்கத்தோடு நட்பு பாராட்டி பழக வேண்டும். இணையவழிக் குற்றங்களிலிருந்து தங்களை காத்துக் கொண்டு, எதிா்காலத்தில் நல்ல பதவிகளை அடைந்து சிறந்த இந்தியக் குடிமகனாக உருவெடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தலைமைக் காவலா் கற்பக லட்சுமி, உதவித் தலைமையாசிரியா்கள் முகமது ரபி, அல்ஹாஜ் முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










