ஊத்துக்குளியில் உள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிங்கப்பெண் அதிரடிப்படையின் துணை ஆய்வாளா் பத்மபிரியா, காவலா் சௌந்தா்யா ஆகியோா் மாணவிகளின் கல்வி முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மனநலம், தன்னம்பிக்கை வளா்ப்பு மற்றும் சமூகத்தில் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகளிடம் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா். மாணவிகள் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற்றனா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா

திசையன்விளை பள்ளியில் விழிப்புணா்வு பேரணி

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

சிஎஸ்ஐ கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணா்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



