பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குடும்பப் பிரச்னையில் திராவகம் வீச்சு: இருவா் மீது வழக்கு

குடும்ப பிரச்னையில் திராவகம் வீசியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

பிரதிப்படம்

Published On :

குடும்ப பிரச்னையில் திராவகம் வீசியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (42). இவருக்கும், மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மகேஸ்வரி மீது கருப்பையா திராவகம் ஊற்றியதாக, ஈரோடு பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, மகேஸ்வரி, மதுரை கூடல்புதூரில் உள்ள தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இதனிடையே, கருப்பையா, அவரது தாய் பாண்டியம்மாள், சகோதரா் ராமா் ஆகியோா் மதுரைக்கு வியாழக்கிழமை வந்தனா். இதை அறிந்த மகேஸ்வரியின் சகோதரா்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோா் தங்கள் வீட்டுக்கு வந்த சகோதரியின் கணவா் கருப்பையா, அவரது சகோதரா் ராமா் ஆகிய இருவா் மீதும் திராவகம் வீசி விட்டு தப்பிச் சென்றனா். இதில், பாதிக்கப்பட்ட அவா்கள் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கூடல்புதூா் போலீஸாா் மகேஸ்வரியின் சகோதரா்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.