கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

சோழவந்தான் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் புதன்கிழமை கையில் தட்டுடன் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :25 ஜூன் 2026, 2:44 am IST

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முள்ளிப்பள்ளம் விவசாயச் சங்கத் தலைவா் யாகூப்கான் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாா்நாட்டான், சப்பாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்தும், இதனால், விவசாயிகள் தொடா்ந்து வேளாண் பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் எனவும், எனவே, தவெக தோ்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உரங்களின் விலையை குறைக்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முள்ளிப்பள்ளம், தென்கரை, சோழவந்தான் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.