மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வரா் பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. முக்கிய விழாவான குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வரா் பூஜை, பூதசுத்தி தனு பூஜை, சோம கும்ப பூஜை, பாலிகா பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன.
இதன்பிறகு, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்தன. காலை 10 மணியளவில் மூலவரின் விமானத்துக்கு புனிதநீா் மூலம் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், வரசித்தி விநாயகா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில், மேலூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

சங்கரன்கோவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



