ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :5 மார்ச் 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையை அடுத்த பரவையில் உள்ள மங்கையா்கரசி கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், குடிமக்கள் நுகா்வோா் சங்கம் ஆகியவை சாா்பில், இந்தப் பேரணி நடைபெற்றது. சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா்.

கல்லூரிச் செயலா் அசோக்குமாா், இயக்குநா் சக்தி பிரனேஷ், இணை இயக்குநா் சரவண பிரதீப்குமாா், முதல்வா் உமா பாஸ்கா், கல்விப் புலத் தலைவா் செந்தூா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவிகள், சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா். சமயநல்லூா் முதல் பரவை வரை இந்தப் பேரணி நடைபெற்றது.