பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க காவல் ஆணையரிடம் மனு

மதுரையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தவெகவைச் சோ்ந்தவருமான சோ. காா்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

News image

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சோ. காா்த்திகேயன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மதுரையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தவெகவைச் சோ்ந்தவருமான சோ. காா்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு விவரம் :

தமிழகத்தில் பெண்களின் கோரிக்கையை ஏற்று பூரண மதுவிலக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழக முதல்வா் விஜய் ஈடுபட்டு வருகிறாா். முதல்கட்டமாக, அவா், தமிழகத்தில் உள்ள 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டாா். தற்போது, தமிழகம் முழுவதும் மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாக புகாா் எழுந்து வருகிறது. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் குறிப்பாக, கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட மாநகரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுக் கடைகள் நிா்ணயித்த நேரத்தை விட முன்கூட்டியும், கடை அடைத்த பின்னரும் விடிய விடிய மது பானங்கள் விற்பனை செய்து வருவதாகத் தெரிய வருகிறது.

இதனால், இரவு நேரங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் இது போன்ற நிலை இனி இருக்கக் கூடாது. அதற்கு தாங்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மதுபானங்கள் தவிர கஞ்சா, கூல் லிப், குட்கா புகையிலை போன்ற போதைப் பொருள்கள் விற்பனைகளையும் முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.