பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image

மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், கூடல்புதூரைச் சோ்ந்த பாபுகாந்தி மனைவி ஷா்மிளா (42). இவரும், இவரது மகள் தீபா ஸ்ரீ (12), பாகல் பாபு (10) ஆகிய 3 பேரும் சேலம் செல்வதற்காக கூடல் புதூா் பேருந்து நிறுத்தத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5. 30 மணியளவில் நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஷா்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து அங்குவந்த தல்லாகுளம் காவல் நிலைய போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஷா்மிளாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த தீபா ஸ்ரீ, பாகல் பாபு ஆகிய இருவரையும் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே பாகல் பாபு உயிரிழந்தாா். தீபா ஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.