போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற முயற்சித்ததாக இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள பெண்ணைத் தேடி வருகிறார்கள்.
சாயல்குடி காவல் சரகம், ஒப்பிலானைச் சேர்ந்த முகம்மது கானின் மகன் தமீன் அன்சாரி (23). இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அதுபோல் அதே ஊரைச் சேர்ந்த முகம்மது கமீது மகள் ஹன்சியஸ் நஸ்லினும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அதில் தமீன் அன்சாரி போலி பள்ளி படிப்புச் சான்றிதழ் கொடுத்திருந்ததும், ஹன்சியஸ் நஸ்லின் போலி பிறப்புச் சான்றிதழ் கொடுத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வர ராஜா சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் லாமேக் வழக்குப் பதிவு செய்து, தமீன் அன்சாரியை கைது செய்தனர். முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தமீன் அன்சாரியை 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் சி.மோகன்ராம் உத்தரவிட்டார். ஹன்சியஸ் நஸ்லின் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


