அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொண்டி அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து பயணிகள் காயம்

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவுப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:53 am

DIN

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவுப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
   தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் விலக்குச் சாலையில் புதன்கிழமை அதிகாலையில், பேருந்து சென்றபோது, சாலையில் மாடு குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.  ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தகவலறிந்த தொண்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த பயணிகளை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.