மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருவாடானை பகுதி மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கு தொடக்கம்

தினமணி செய்தி காரணமாக திருவாடானை தாலுகாவில் பயிர்க்காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:55 am

DIN

தினமணி செய்தி காரணமாக திருவாடானை தாலுகாவில் பயிர்க்காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
திருவாடானை தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 42ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பளவில் நெல் விவசாயம் செய்யபட்டு வருகிறது. தற்போது பருவ மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க் காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில்  கணக்கு தொடங்க மத்திய கூட்டுறவு வங்கி மறுத்து வந்தது.
இது தொடர்பாக தினமணி நாளிதழில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் புதன்கிழமை மத்திய கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கணக்கு தொடங்கும் பணிகள் நடைபெற்றன. பயிர்க் காப்பீடு செய்ய குறைந்த நாள்களே உள்ள நிலையில் தாலுகா முழுவதும் உள்ள தொண்டி,ஆர்.எஸ் மங்கலம்,திருவாடானை ஆகிய இடங்களில்  மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கணக்கு தொடங்குவதற்காக குவிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.