கமுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட தனிநபர் இல்லக் கழிப்பறைகளை முறையாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பாண்டியன் தலைமையில், ஒன்றிய ஆனையாளர் (கிராம ஊராட்சிகள்) ரவி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
"முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்' என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறைகள் இல்லாத வீடுகளைக் கணக்கிட்டு அனைத்து வீடுகளிலும் புதிதாக கழிப்பறைகள் கட்டுவதுடன், நூறு சதவீதம் திறந்த வெளியில் மலம், ஜலம் கழித்தலற்ற மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தை திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற முழு சுகாதாரான ஊராட்சி ஒன்றியமாக அறிவிப்பு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக கழிப்பறைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கமுதி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் நாகரஞ்சித், ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார வளர்ச்சி அலுவலர் விஷ்வாபதி, கமுதி வட்டார வேலாண்மை உதவி இயக்குநர் சேதுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.65.98 கோடியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலம் ஆய்வு

ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் மாயம்

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு






