ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து புதன்கிழமை வினோத நேத்திக் கடனை செலுத்தினர்.
கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா கடந்த மார்ச் 22- ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தினசரி இரவு முத்துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு காமதேனு, குதிரை, மயில், யானை, சிம்ம, வெள்ளிக்குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் கமுதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புதன்கிழமை பக்தர்கள் உடல் முழுவதும் சகதியை பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத நேத்தி கடனை செலுத்தினர். மேலும் அக்கினி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், கரும்பாலை தொட்டி கட்டுதல் உள்ளிட்ட நேத்தி கடன்களை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
பங்குனி பொஙகல் திருவிழாவை முன்னிட்டு மதுரை, சென்னை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டுச் சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு கமுதி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் மாதவிடாய்..! மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


