எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் புதன்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ராமநாதபுரத்தில் புதன்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
     ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் உள்ள கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், ஈஸ்ட் கோஸ்ட் சுழற் சங்கமும் இணைந்து இப்பேரணியை நடத்தின. ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து  பேரணியை டி.ஐ.ஜி.என்.காமினி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்வில்  சுழற்சங்கத் தலைவர் ஜெ.தினேஷ்பாபு தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் கே.கணேசபாண்டியன், இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் மருத்துவர் தி.அரவிந்தராஜ், வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   சங்கத்தின் முன்னாள் ஆளுநர் பி.ஆறுமுகப்பாண்டியன் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். 
பேரணியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை  மேலாளர்  குணசேகரன்,சுழற் சங்க  முன்னாள் தலைவர்  ஜெ.சுகுமார்,  ராஜாராம் பாண்டியன்  ஆகியோர்  உள்பட  பலரும் கலந்து  கொண்டனர். 
பேரணி   நகரின் முக்கிய   வீதிகள்   வழியாக  வந்து   வழிவிடு முருகன் கோயில் முன்பாக நிறைவு பெற்றது.சுழற் சங்க துணை ஆளுநர் ஆர்.வி.எஸ்.பார்த்தசாரதி வரவேற்று பேசினார். சுழற் சங்க செயலாளர் எம்.பாபு நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.