
தொண்டி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சியில் இருந்து உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு இரும்புக் குழாய்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, தொண்டி அருகே பழயனக்கோட்டை விலக்கில் திடீரென கவிழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்து திருவாடானை வட்டாட்சியர் சேகர், தொண்டி போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






