தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திரௌபதி அம்மன் கோயிலில்  ஆடித்திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:22 am

DIN

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. அதையடுத்து, காப்புக்கட்டுதல், கொடியேற்றும் வைபவமும் நடைபெற்றன. விழாவையொட்டி, தினமும் இரவு கோயில் வளாகம் முன், மகாபாரதம் தொடர் திரையிடப்படவுள்ளது.
 வரும் 14 ஆம் தேதி பஞ்சபாண்டவர் திரௌபதி திருக்கல்யாணமும், 16 ஆம் தேதி அர்ச்சுணன் தபசு நிகழ்ச்சியும், 18, 19 ஆம் தேதிகளில் பீமன் கீசகனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி திருவிளக்குப் பூஜையும் நடைபெறுகிறது.
  22ஆம் தேதி மகாபாரத கதையுடன் தொடர்புடைய அரவான் களப்பலியும், 23ஆம் தேதி துரியோதனன் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. 26 ஆம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. 
அன்று இரவு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.