முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.மலைக்கண்ணன் தலைமை வகித்தார். கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக கிராமத்தினர் கடந்த ஒரு மாதமாக விரதமிருந்து பேரையூர் கிராமத்தில் மண் புடி எடுத்து, அதன்மூலம் செய்யப்பட்ட குழந்தைகள், குதிரை உருவம் கொண்ட பொம்மைகளை தலையில் சுமந்து கோயிலை அடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு முன் பொங்கல் வைத்து, படையலிட்டனர். மாலையில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருவிழா குறித்து, கண்டிலான் கிராமத்தைச் சேர்ந்த லிங்கம் கூறியதாவது:
ஆண்டுதோறும் எங்களது கிராமத்தில் புரவி எடுப்பு விழா நடைபெறும். வறட்சி நீங்கி, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சகோதரத்துவத்துடன் இவ்விழாவை கொண்டாடி வருகிறோம் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டிலான் கிராமத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு தாக்கல்

தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

