மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு விழா

முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி  அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 1:21 am

முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி  அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.மலைக்கண்ணன் தலைமை வகித்தார். கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக கிராமத்தினர் கடந்த ஒரு மாதமாக விரதமிருந்து பேரையூர் கிராமத்தில் மண் புடி எடுத்து, அதன்மூலம் செய்யப்பட்ட குழந்தைகள், குதிரை உருவம் கொண்ட பொம்மைகளை தலையில் சுமந்து கோயிலை அடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு முன் பொங்கல் வைத்து, படையலிட்டனர். மாலையில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருவிழா குறித்து, கண்டிலான் கிராமத்தைச் சேர்ந்த லிங்கம் கூறியதாவது:
ஆண்டுதோறும் எங்களது கிராமத்தில் புரவி எடுப்பு விழா நடைபெறும். வறட்சி நீங்கி, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சகோதரத்துவத்துடன்  இவ்விழாவை கொண்டாடி வருகிறோம் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டிலான் கிராமத்தினர் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.