மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்
ராமேசுவரம், மார்ச் 29: உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயிலை வியாழக்கிழமை மறிக்க சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீரை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரிய அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,
இதனை கண்டித்து, ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ராமேசுவரம் வரும் திருச்சி ரயிலை மறிக்கச் சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மாவட்ட செயலாளர் குருசர்மா, நகர பொதுச்செயலாளர் நம்புகார்த்திக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

