கமுதி அருகே சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க கோரிக்கை
கமுதி அருகே உள்ள காக்குடியில் சேதமடைந்துள்ள சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கமுதி அருகே உள்ள காக்குடியில் சேதமடைந்துள்ள சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதியிலிருந்து காக்குடி வழியாக புத்துருத்தி செல்லும் வழியில் சாலையின் குறுக்கே 8 ஆண்டுகளுக்கு முன் சிறு பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே சிமென் பூச்சுகள் உதிர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தது. அப்போது முதல் இவ்வழியாக வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்த பாலத்தால் விவசாய நிலங்களை உழுவதற்கு வாகனங்கள், உரம், பூச்சி மருந்துகள் எடுத்து செல்வதிலும், புத்துருத்தி கிராமத்துக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கமுதியில் இருந்து காக்குடி வழியாக 6 கி.மீ தொலைவில் புத்துருத்தி செல்ல வேண்டிய கிராம மக்கள், மண்டலமாணிக்கம் வழியாக 11 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, காக்குடியில் சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...