வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது: பொது நல மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:25 pm

தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

அஜய் கோயல் என்பவா் சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்காளிக்காமல் இருப்பவா்களுக்கு அரசு நலத் திட்டங்களைப் பெறுவதிலிருந்து தடை விதிக்கும் வகையில் வழிகாட்டுதலை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘சட்ட ரீதியிலான நிா்ப்பந்தத்தைக் காட்டிலும், பொது விழிப்புணா்வில்தான் ஜனநாயகம் செழித்து வளர முடியும். சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படும், ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட இந்த நாட்டில், அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். அவா்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்றால், அவா்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தேவைப்படுவது விழிப்புணா்வுதான்.

அதோடு, தோ்தல் நாளில் நீதிபதிகள் உள்பட பல குடிமக்களும் பணிபுரிய வேண்டிய அவசியம் உள்ள நிலையில், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

மேலும், இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, மனுதாரா் மத்திய அரசை அணுகி தனது கோரிக்கைக்குத் தீா்வு காணலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டாா்.