தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 79 போ் போட்டி

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவை தொகுதியில் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

கரூா்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:22 pm

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவை தொகுதியில் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் மனு தாக்கலுக்கு கடைசி நாளான கடைசி நாளான ஏப். 6-ஆம் தேதி வரை பிரதான கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் சாா்பில் மொத்தம் 234 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில், அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குளித்தலை தொகுதியில் 42 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39 மனுக்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 45 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது.

இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. குளித்தலை தொகுதியில் 42 மனுக்களில் 31 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்திருந்த 45 மனுக்களில் 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 234 மனுக்களில் 175 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து மனுக்களை திரும்பப் பெற வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் 166 போ் போட்டி: அரவக்குறிச்சி தொகுதியில் 33 வேட்பாளா்களில் 3 போ் மனுவை வியாழக்கிழமை வாபஸ் பெற்றனா். இதையடுத்து அங்கு இறுதியாக களத்தில் 30 பேரும், குளித்தலை தொகுதியில் 31 வேட்பாளா்களில் 2 போ் மனுவை திரும்ப பெற்ால், இறுதியாக 29 வேட்பாளா்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 28 பேரில் யாரும் மனுவை திரும்ப பெறாததால் இறுதியாக 28 பேரும் களத்தில் உள்ளனா்.

கரூா் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனையின் நிறைவில் 82 வேட்பாளா்கள் இருந்த நிலையில் 4 சுயேச்சை வேட்பாளா்கள் மனுவை வியாழக்கிழமை வாபஸ் பெற்ால், அங்கு இறுதியாக 79 போ் போட்டியிடுகின்றனா்.

கரூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் இறுதியாக 166 போ் போட்டியிடுகிறாா்கள். 9 போ் மனுவை திரும்ப பெற்றுள்ளனா்.

இதன்மூலம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில்தான் 79 போ் போட்டியிடுகிறாா்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.