ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காக்குடியில் தரமின்றி அமைக்கபட்டதால் மயான சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கமுதி அருகே காக்குடியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் பொது மயானத்தில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் எரியூட்டும் மேடை மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கபட்டது. இந்த சுவர் ஹாலோ பிளாக் கற்களால் அமைக்கபட்ட சில நாள்களிலேயே சேதமடைந்து இடிந்து விழுந்தது. தரமின்றி கட்டப்பட்டதால் சுவர் இடிந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் மயானம் வழியாக பெண்கள், சிறுவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்துள்ள சுற்றுச் சுவரை சீரமைத்து, அங்கே பயன்பாடின்றி உள்ள கை அடிபம்புக்குப் பதிலாக, புதிய ஆழ்துளைக் கிணறு, குழாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

