நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முதுகுளத்தூர் அருகே இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 6:27 pm

DIN

முதுகுளத்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சி வழியாக புளியங்குடியைச் சேர்ந்த கூத்தபெருமாள் மகன் சுரேஷ்கண்ணன்(19), அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். முன்னால் சென்ற ஆட்டோவை அவர்கள் முந்த முயன்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதுவது போல் சென்றனராம். இதனால் ஏற்பட்ட மோதலில் ஆதன குறிச்சியைத் த ரஞ்சன் மனைவி முத்துலெட்சுமி (48) தாக்கப்பட்டார். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தனர். முத்துலெட்சுமி கொடுத்த புகாரில் புளியங்குடியைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன், திருச்செல்வம், மாய ரமேஷ், கோகுலகண்ணன் மற்றும் முகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். மற்றொரு தரப்பில் சுரேஷ்கண்ணன் கொடுத்த புகாரில் கதையன் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் சரவணன்,சத்யராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.