முதுகுளத்தூர் அருகே இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
முதுகுளத்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.


முதுகுளத்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சி வழியாக புளியங்குடியைச் சேர்ந்த கூத்தபெருமாள் மகன் சுரேஷ்கண்ணன்(19), அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். முன்னால் சென்ற ஆட்டோவை அவர்கள் முந்த முயன்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதுவது போல் சென்றனராம். இதனால் ஏற்பட்ட மோதலில் ஆதன குறிச்சியைத் த ரஞ்சன் மனைவி முத்துலெட்சுமி (48) தாக்கப்பட்டார். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தனர். முத்துலெட்சுமி கொடுத்த புகாரில் புளியங்குடியைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன், திருச்செல்வம், மாய ரமேஷ், கோகுலகண்ணன் மற்றும் முகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். மற்றொரு தரப்பில் சுரேஷ்கண்ணன் கொடுத்த புகாரில் கதையன் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் சரவணன்,சத்யராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...