மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாயல்குடியில் பாஜக செயற்குழு கூட்டம்

சாயல்குடியில் பா.ஜ.க.செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 6:22 pm

சாயல்குடியில் பா.ஜ.க.செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். நகர் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் பொன்.ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவர் குப்புராம், வரும் சட்டபேரவை தேர்தலில் பாஜக வினருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றார்.
கூட்டத்தில் விவசாய அணி செயலர் முருகவேல், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நாகூர்பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, மணிமேகலை, மாவட்ட மகளிரணி தலைவி நாகலெட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.