ராமேசுவரத்தில் இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்துள்ள நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பாலமுருகன் (28). ராமேசுவரம் புதுரோடு பகுதியில் குடியிருந்து வந்த பாலமுருகன், வாகன ஓட்டுநராக இருந்துள்ளார். ஞாயிற்றுகிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்த பாலமுருகன், மாடியில் தூங்கச் சென்றுள்ளார். திங்கள்கிழமை காலையில் வீட்டின் முன்பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த தனுஷ்கோடி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, பாலமுருகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் திலகராணி வரதராஜ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யவன்ஷியை மிரட்டிய ஜேமிசனுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி!
சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வு
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

