ராமேசுவரத்தில் இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்துள்ள நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பாலமுருகன் (28). ராமேசுவரம் புதுரோடு பகுதியில் குடியிருந்து வந்த பாலமுருகன், வாகன ஓட்டுநராக இருந்துள்ளார். ஞாயிற்றுகிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்த பாலமுருகன், மாடியில் தூங்கச் சென்றுள்ளார். திங்கள்கிழமை காலையில் வீட்டின் முன்பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த தனுஷ்கோடி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, பாலமுருகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் திலகராணி வரதராஜ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

பயணிகள் பாதுகாப்புக்காக மாற்றம் பெறும் நீல வழித்தட மெட்ரோ ரயில்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

