கமுதி அருகே துண்டிக்கப்பட்ட மின் வயர்களை அகற்றாததால், விவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.
கமுதி அடுத்துள்ள பேரையூர்-- முதுகுளத்தூர் செல்லும் சாலையோரத்தில் அய்யனார்புரம் அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் பயன்படுத்த, முதுகுளத்தூருக்குச் செல்லும் மின் வழித்தடத்தில் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8 ஆண்டுகளாக பருவமழை இல்லாததால், நீரூற்றுக்கள் குறைந்து, ஆழ்துளைக் கிணறுகளும் அழிந்துவிட்டன. இதனால் விவசாய தேவைக்காக மின்சாரம் பயன்படுத்துவது குறைந்துள்ளது.
எனவே, இதற்காக அமைக்கப்பட்ட மின் வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள மின் கம்பங்களில் மின் வயர்கள் தரையை ஒட்டி தொங்குகிறது. இதனால், மின்சாரம் விநியோகிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

ஆன்லைன் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

