கமுதி அருகே துண்டிக்கப்பட்ட மின் வயர்களை அகற்றாததால், விவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.
கமுதி அடுத்துள்ள பேரையூர்-- முதுகுளத்தூர் செல்லும் சாலையோரத்தில் அய்யனார்புரம் அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் பயன்படுத்த, முதுகுளத்தூருக்குச் செல்லும் மின் வழித்தடத்தில் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8 ஆண்டுகளாக பருவமழை இல்லாததால், நீரூற்றுக்கள் குறைந்து, ஆழ்துளைக் கிணறுகளும் அழிந்துவிட்டன. இதனால் விவசாய தேவைக்காக மின்சாரம் பயன்படுத்துவது குறைந்துள்ளது.
எனவே, இதற்காக அமைக்கப்பட்ட மின் வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள மின் கம்பங்களில் மின் வயர்கள் தரையை ஒட்டி தொங்குகிறது. இதனால், மின்சாரம் விநியோகிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரைப் பெருவிழா! மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்!
சைவத்திற்கு மாறிய சிலம்பரசன்!

தவெக பிரசாரம்; திருச்சி வந்தடைந்த விஜய்! | TVK

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

