ராமநாதபுரம் மாவட்ட விவசாயப் பணிகளுக்கு வைகை அணையிலிருந்து நீர் திறக்கவேண்டும் என, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலர் மு. மதுரைவீரன் தனது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைசார்ந்து பாசனநீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விளைநிலங்கள் 67,837 ஏக்கர் உள்ளன. இதற்கான பாசன நீர் 207 கண்மாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பருவமழை பெய்து விளைநிலங்களும், கண்மாய் பகுதிகளும் ஆங்காங்கே தண்ணீரும், ஈரப்பதமுமாக உள்ளன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் பாசனநீர் திறக்கப்பட வேண்டும். வைகை அணைப் பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இம்மாவட்டத்துக்கான பாசனநீர் திறந்து விடப்பட்டால், அனைத்து கண்மாய்களும் நிரம்பி, நெல், மிளகாய் உள்ளிட்ட விவசாயப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள முடியும்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேவையான பாசனநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

