கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு, பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு,
மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் மற்றும் இவரது மனைவி வெள்ளையம்மாள் வந்திருந்தனர். இவர்கள், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவை சந்தித்து, கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்ற தங்களது மகனைக் காணவில்லையெனவும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் கூறி மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் மகன் கோவிந்தராஜ் (26) கடந்த 11 ஆம் தேதி கேரளத்தில் கொல்லம் பகுதியில் மீன்பிடி கூலி தொழில் செய்ய சென்றார்.
மறுநாள், கொல்லம் பகுதியில் 14 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற போது, கடலில் தவறி விழுந்து விட்டதாக தகவல் வந்தது. அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.
எனவே, காணாமல்போன எங்களது மகனை கண்டுபிடித்து தாருங்கள் என அதில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

