ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கண்டுகொள்ளான் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து பாதுகாப்பு கோரி திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கண்டுகொள்ளான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (28). மீனவரான இவரும், அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கரி (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சிவசங்கரி தொண்டியில் உள்ள மாலை நேரக் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 18 ஆம் தேதி கிராமத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வந்துள்ளனர். பின்னர், திங்கள்கிழமை திருநெல்வேலி வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டு பதிவுச் சான்றிதழுடன், அன்று மாலை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

