சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ராமேசுவரத்தில் பள்ளி மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு

தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் சார்பில், ராமேசுவரத்தில் துளிர் திறனறிதல் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 291 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:29 am

தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் சார்பில், ராமேசுவரத்தில் துளிர் திறனறிதல் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 291 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
       ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டாரப் பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் துளிர் மாத இதழ் இணைந்து, மாநில அளவிலான துளிர் திறனறிதல் போட்டித் தேர்வை நடத்தின. இத்தேர்வில், அரசு உயர்நிலைப் பள்ளி, ராமேசுவரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்த மேல்நிலைப் பள்ளி. ஹோலி ஐலண்ட் மேல்நிலைப் பள்ளி, பாம்பன் காமராஜர் நடுநிலைப் பள்ளி, சின்னப்பாலம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆகிய 6 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 291 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.     மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இத்தேர்வு 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 6, 7, 8 வகுப்பு  மாணவர்கள் இளநிலைப் பிரிவு, 9,10 வகுப்பு மாணவர்கள் உயர்நிலைப் பிரிவு, 11, 12 வகுப்பு மாணவர்கள் மேல்நிலைப் பிரிவு என தனித்தனியாக தேர்வு நடத்தப்படுகிறது.     இத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.      இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட துளிர் திறனறிதல் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ராமேசுவரம் வட்டாரத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர் ஜெரோம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.