கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்குப் பயந்து திரும்பியபோது, படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை 500 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
அப்போது வேகமாக கரை திரும்ப முயன்ற விசைப் படகுகளில் முனியராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதனை கண்ட சக மீனவர்கள் 4 மீனவர்களையும் மீட்டு ராமேசுவரம் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

வெளியானது பெத்தி டிரைலர்!

இன்றைய செய்திகள் - நேரலை!

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி! தயாரிப்பாளர் சங்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
