ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்துஇப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் வேளாண்மை துறை துணை இயக்குநர் சொர்ணமாணிக்கம் தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வாசு பாபு, முன்னிலை வகித்து ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கி பேசினார்.
வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பாலசுப்ரமணியம் காளான் வளர்ப்பு பயிற்சி பற்றி விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து உதவி பேராசிரியர் தாமோதரன் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படும் திட்டங்களைப் பற்றி விளக்கி எடுத்துக் கூறினார்.
பின்னர் ஆனந்தூர் கிராமத்தில் மாலிக் உசேன் ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை அலுவலர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


