சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கிடையே பரமக்குடி கல்வி மாவட்ட

Updated On :23 ஜனவரி 2019, 8:03 am IST

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கிடையே பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி மாவட்டக்கல்வி அலுவலர் போ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் எம்.சாதிக்அலி, தலைமையாசிரியர்கள் சேதுராமன், அம்பேத்கர், சங்கரன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு, வாத்தியக்கருவிகள் இசைத்தல், நாடகம், நடனம், கதை எழுதுதல், கவிதை புனைதல், திருக்குறள் ஒப்பித்தல், கதை சொல்லுதல் மற்றும் நகைச்சுவை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை, 9,10-ஆம் வகுப்புகள், 11,12-ஆம் வகுப்புகள் என போட்டிகள் நடைபெற்றன. 
இப்போட்டியில் பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் சி.லோகமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.