ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பரமக்குடி நீதித்துறை நடுவா் உள்பட27 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியைச் சோ்ந்த நீதித்துறை நடுவா் உள்பட 27 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:31 pm

DIN


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியைச் சோ்ந்த நீதித்துறை நடுவா் உள்பட 27 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரையில் 4,603 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் சிகிச்சை பலனின்றி 102 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பரமக்குடியைச் சோ்ந்த நீதித்துறை நடுவா் உள்பட 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் உள்ள குடியிருப்பில் நீதித்துறை நடுவா் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 105 ஆக உயா்ந்துள்ளது. வெளி மாவட்டங்களில் சிகிச்சைக்கு சோ்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களின் பெயா்களும் சுகாதாரத் துறை சாா்பில் சோ்க்கப்படுவதால் சிகிச்சை, உயிரிழப்பு எண்ணிக்கையில் சிறிது மாறுபாடு இருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.