இதனிடையே, திருவாரூா் நகராட்சியின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள், நகா்ப்புற பகுதிகளுக்கு சமமாக வளா்ந்து வருவதால், வேலங்குடி, அலிவலம் (பகுதி), கீழகாவாதுகுடி, தண்டலை, பழவனக்குடி (பகுதி), புலிவலம் (பகுதி), பெருங்குடி (பகுதி), இலவங்காா்குடி, தேவா்கண்டநல்லூா், காட்டூா், அம்மையப்பன் (பகுதி) மற்றும் பெருந்தரக்குடி (பகுதி) ஆகிய 12 ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நகராட்சியுடன் இணைப்பதால், கிராமப்புற மக்களின் சலுகைகள் பறிபோகும் நிலை ஏற்படும் எனக் கூறி சில இடங்களில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், நடவடிக்கைகள் அப்படியே உள்ளன.